Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල
நல்லிணக்கம்:

ஏன் இந்த பேதம்?

மொழியால் வேறுபட்ட மனிதர்களை ஒன்றிணைப்பதே இன்று சவால்மிக்க விடயமாகிவிட்டது. எனினும், இந்த வாழ்வின் உண்மை நிலையை அறிந்தால் எம்மால் முடிந்தது எதுவும் இல்லை என்பதை நடைமுறையில் வாழ்ந்து காட்டுகின்றார் இந்திர ரத்தன தேரர். பௌத்த தேரராக இருந்தாலும் தமிழை கற்றுத் தேர்ந்து இன்று தமிழில் போதிக்கும், எழுதும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்ட ரத்தன தேரர், நல்லிணக்கத்திற்கு மொழி தடையாக காணப்படுவதாகவும் அதனை கற்றுத்தேர்வது காலத்தின் தேவை எனவும் தமிழில் எமக்கு விளக்கமளிக்கின்றார்.  

06.04.2020

உண்மையில் கொரோனாவால் இறந்தது ஒரு இஸ்லாமியரும் அல்ல சாய்ந்த மருது என்ற இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஒருவர் செய்த தவறு எங்களுக்குகிடையில் உரையாடல் நிகழும்போது அது கொரோனாவைவிட வேகமாக பரவிவிட்டிருந்தது. கடைசியில் நான் என் நண்பனுக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷொட்தான்….

04.04.2020

கையில் காசிருந்தும் வெளியில் போக முடியவில்லை. அரிசி, பருப்பு, சோயாமீட் என்பன குறிப்பிட்டளவே உள்ளன. மூன்று நேரமும் அல்ல ஒரு நேரம் சமைத்து சாப்பிடுகின்றோம். எமது முதலாளி அவ்வப்போது குறிப்பிட்டளவு பொருட்களை வாங்கி அனுப்புகின்றார். நிலைமையை உணர்ந்து இப்போது காலை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு இரண்டு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றோம். காலை சாப்பாட்டை தவிர்ப்பதற்காக காலையில் எழும்பாமல் தூங்குவோம்….

03.04.2020

தனிமைப்படுத்தல் என்பது சுயநலத்தின் அடையாளமாக மாறக்கூடாது. பொது நலத்தின், சமூகம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இன்று நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளே வாழ்கின்றோம். கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இன்று நான் எப்படி சாப்பிடுவேன் என்பதை நினைக்கின்றார்களே தவிர….

30.03.2020

தமிழை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழ் பேசும் நபர்களைத் தேடி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். எனது பேஸ்புக்கில் எனது பெயரை தமிழுக்கு மாற்றி கணக்கைப் புதுப்பித்தேன். பிறகு இலங்கை இந்தியா மலேசியா கனடா போன்ற உலகம் முழுக்கவும் உள்ள தமிழர்களை அதில் இணைத்துக்கொண்டு…..

11.03.2020
சுதந்திரத்திற்குப் பின்!

இலங்கை எப்படி இருந்தது!?

சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் காலம் கட்டியெழுப்பப்பட்டதிலும், அழிக்கப்பட்டதிலும் சகலருக்கும் பங்குண்டு. அனைத்து இன மக்களின் வாழ்விலும் தாழ்விலும் அனைவருமே பங்கெடுத்துள்ளனர். உறைக்கும் இந்த உண்மையை தமது அனுபவங்களால் முன்வைப்பனவே இக்கதைகள்…ஒரு பொருளின் அடிப்படையில் தங்கள் நினைவுகளை மீட்டியுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த பொருள்களும் சுவாரஸ்யமானவை. காப்பு, அம்மி, மண்சட்டி, பேப்பர் சுருள், வசம்பு,….

09.03.2020

இந்த நீர்பாசன திட்டம் காரணமாக கூடுதலான இழப்புக்கள் சிங்கள பௌத்தர்களுக்கே ஏற்பட்டுள்ளன. அலியாகட மற்றும் மாவத்தவெவ கிராமங்கள் முற்றாக நீரில் முழ்கி இல்லாமல் போயுள்ளன. அந்த கிராம மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களும் நீர் நிரம்பி அழிந்துவிட்டன. அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது முன்னர் திருகோணமலையில் மர முந்திரிகை காணிகளாக இருந்த இடத்திலாகும். அவர்கள் அங்கு தமிழர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும்…..

28.02.2020
இளைஞர்களுக்கு வேண்டும்!

சமாதானம் மலர வழி விடல் அவசியம்!

வடக்கில் மக்கள் யுத்தத்தை வேண்டாம் என்றனர். யாரும் ஜனநாயகம், மனிதாபினம் என்பவற்றிற்கு மதிப்பளிக்காமல் யத்தம் தொடுக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிகாமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாம் கண்டோம். யார் அவர்களை கொலை செய்தார்கள் என்பதைவிட யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது…

28.02.2020
விளையாட்டும் கலையும்

இன, மத, மொழிகளுக்கு இடையிலான பாலம்!

மொழி ரீதியாக பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் பொதுவான இது போன்ற விடயங்களில் அவர்களை ஒன்றுகூடவைத்து இணக்கப் பாட்டை ஏற்படுத்த முடியும். அதிபர்களின் அனுமதியுடன் கராத்தேயை மாதம் ஒருமுறையேனும் பயிற்றுவிப்பது சிறந்தது.

08.02.2020

ஒரு தமிழ் மற்றும் சிங்களக் குடும்பம் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் திருகோணமலை, குச்சவெளி, கண்டி, திகண, நீர் கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது…

30.01.2020

துட்டகைமுனுவுக்கும் எல்லாலனுக்கும் இடையிலான யுத்தத்தை பற்றி நாம் ஏன் வரைய வேண்டும். பதிலாக கண்ணொறுவைப் போரை வரை ந்திருக்கலாம். எல்லாளன் , துட்டகைமுனு போரை சித்திரங்கள் மூலம் வரைந்து தமிழ் எதிர்ப்பு உணர்வலையை வெளிப்படுத்துவதாக இருந்தால் அதனை எம்மால் அனுமதிக்க முடியாது. பொது இடங்களில் வரையும் சித்திரங்களும் ஓவியங்களும் எல்லா இனங்களாலும் அங்கீகரிக்கத் தக்கதாக அமைய வேண்டும்.

06.01.2020

இந்த விழாவை நாங்கள் உலகத்தில் வேறு எந்த இடத்திலாவது நடத்தியிருக்கலாம். போறா மக்களின் வருகையால் இந்த நாடு நன்மையடைகிறது. இம் மாநாடு இந்தத் தீவின் சுற்றுலாத் துறைக்கு மேம்பாட்டைத் தருகிறது. அவர்கள் ஒருசில நாட்கள் இங்கு தங்கியிருந்துவிட்டுப் பயணித்திருப்பர். ஆனால்….

17.12.2019

ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தை புரிந்து கொண்டு இருக்க வேண்டும், ஒன்றாக வாழ வேண்டும்,​சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு மதிப்புக் கொடுக்க வேண்டும். இவை இல்லாதிருத்தல்தான் முரண்பாடுகள்,யுத்தம்,குரோதம் என்பவற்றுக்குக் காரணம்.

01.12.2019

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கனமழை கொட்டியது. மாணவர்கள் மழையில் நனைந்தவாறே மிகவும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினார்கள். குடத்தனைப் பகுதியில் சிறுவர்கள் தாமாகவே குழுக்களாகப் பிரிந்து கூடி விளையாடுவதைப் போன்று மகிழ்ச்சியுடன் அவர்கள் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள்….

15.11.2019

தற்போதைய நிலையில் நாட்டின் எல்லா பிரதான நகரங்களிலும் இன நல்லிணக்க செய்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பலன்களானது மிகவும் சொற்ப மானவையாவுள்ளன. அதிகமான கிராமத்தவர்கள் நகரத்தில் இருந்து தூரமாக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். நகரங்களுக்கு அப்பால் வசிக்கின்ற பல்லினங்களையும் பல மதத்தவர்களையும் இலக்காகக் கொண்டு இன நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

27.10.2019

எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி அபேட்சகர் நேரடியாக வன்முறையுடன் தொடர்புபடுவதில்லை என்பது எமது கடந்த கால தேர்தல் அவதானத்தின் போது கண்ட அனுபவம். மக்களது நாளாந்த நடவடிக்கையுடன் தொடர்புபடுகின்ற மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஊடாகத்தான் வன்முறைகளைத் தூண்டுகின்ற விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன….

22.10.2019