கதை சொல்லும் படங்கள்!
தாய்மார்கள் அநாதைகளாக…?!
இன மத சாதி போதமற்று முதியவர்கள் என்ற வகையில் இவர்கள் இங்கே ஒன்றுபட்டுள்ளனர். உணவும், மருந்தும், வரையறுக்கப்பட்ட ஆடைகளையும் தவிர அவர்களுக்கு எதுவும் தேவைப்படுவதில்லை. அன்பும், பாதுகாப்பும் இருக்கும் நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள். !
பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த தாய்மார்கள் எப்படி அனாதையாவார்கள்? திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று,வளர்த்து ஆளாக்கியபின் தனித்துவிடப்படும் தாய்மார்களின் உலகம் இது! வாதுவ பகுதியில் அமைந்துள்ள ‘மார்க்அன்னாஸ் முதியோர்இல்லத்தில்’ நாம் பார்த்தவை. இரத்த உறவுகளோ இள இரத்தங்களோ இங்கில்லை. ஓவ்வொருவரும் தமக்கு இயலுமான வேலைகளைச் செய்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு வாழ்கிறார்கள். இன மத சாதி போதமற்று முதியவர்கள் என்ற வகையில் இவர்கள் இங்கே ஒன்றுபட்டுள்ளனர். உணவும், மருந்தும், வரையறுக்கப்பட்ட ஆடைகளைத் தவிர அவர்களுக்கு எதுவும் தேவைப்படுவதில்லை. அன்பும், பாதுகாப்பும் இருக்கும் நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள். அதிகமாக சிந்திக்கவோ, அதிகமாக இயங்கவோ முடியாத நிலையில் அவர்களின் உலகில் அவர்கள் வாழ்கிறார்கள்!