நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
பொய்ச் செய்திகளே எனக்கான சவால்’
“யுத்தத்தின் இறுதி நிமிடங்களை சுமந்த மூல்லைத்தீவு இன்றும் அதன் ஆறாத துயரத்தினை சுமந்து கொண்டுதான் காலத்தினை கழிக்கின்றது. வறுமை, பொருளாதார கட்டமைப்பின்மை, பெண் தலமைத்துவ குடும்பங்கள், விதவைகள், முன்னாள் போராளிகள், மாற்றுவலுவுடையோர், அரசியல்கைதிகள் மற்றும் காணமல் போனோரின் உறவுகள் என அதிகமாக கொண்ட மண் முல்லைத்தீவு. இலங்கை அரசைப் பொறுத்தவரையில் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை, துறைசார் குழுக்கள் அமைக்கப்பட்டமை, வழிநடத்தும் குழு என்பன […]
“யுத்தத்தின் இறுதி நிமிடங்களை சுமந்த மூல்லைத்தீவு இன்றும் அதன் ஆறாத துயரத்தினை சுமந்து கொண்டுதான் காலத்தினை கழிக்கின்றது. வறுமை, பொருளாதார கட்டமைப்பின்மை, பெண் தலமைத்துவ குடும்பங்கள், விதவைகள், முன்னாள் போராளிகள், மாற்றுவலுவுடையோர், அரசியல்கைதிகள் மற்றும் காணமல் போனோரின் உறவுகள் என அதிகமாக கொண்ட மண் முல்லைத்தீவு. இலங்கை அரசைப் பொறுத்தவரையில் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை, துறைசார் குழுக்கள் அமைக்கப்பட்டமை, வழிநடத்தும் குழு என்பன அமைக்கப்பட்டு புரையோடிப்போயிருக்கும் தமிழ் மக்களின் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குழுவினரே குழப்பவாதிகளாக உள்ளனர்”; என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.
‘அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு, காணமல் போன உறவுகளின் போராட்டம், வறுமை இதற்கு நியாயமான நீதியான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்காது நல்லிணக்கம் என்பது ஏற்படுத்தப்படுவது சாத்தியமற்ற விடயம் தான்”என்கிறார்.
/
முல்லைத்தீவின் பிரச்சனைகளும் அதற்காக அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படும் படிமுறைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவை நேர்காணல் செய்த போது,
முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் மற்றும் முஸ்லிம் மக்களின் குடியேற்றங்கள் தொடர்பில் உங்களுடைய கருத்து?
நான் எந்தவொரு மதத்திற்கோ, இனத்திற்கோ எதிரானவர் அல்ல எமது மக்கள் நல்லிணக்கத்தோடு, சுய கௌரவத்தோடு தமக்குரிய இறைமையோடு வாழ்வதற்கு விரும்புகின்றனர் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் முஸ்லீம், சிங்கள மக்களை விட தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை ஓரம் தள்ளிவிட்டு திட்டமிட்டு சிங்களவர், முஸ்லீம்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகளையும் குடியேற்றங்களையும் அனுமதிக்க முடியாது.
சிங்கள முஸ்லிம் மக்களின் குடியேற்றங்கள் முல்லைத்தீவில் ஏற்படுத்துவது அரசின் திட்டமிடப்பட்ட சதி எனும் விமர்சனம் உள்ளதே?
இக் கேள்வியில் இரண்டு பாகம் உள்ளது சிங்கள,முஸ்லீம் மக்களின் குடியேற்றங்கள் முல்லைத்தீவில் ஏற்படுத்துவது அரசின் திட்டமிட்ட சதி என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாகவே உள்ளது, இதற்கு ஆதாரத்தை கூறமுடியும். நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களுக்கான ஓர் விசேட செயலணியை அரசு உருவாக்கி அதில் தனியே முஸ்லீம், சிங்களவருக்கு மட்டும் நிதியை ஒதுக்கீடு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் திட்டமிட்ட சதிதான், ஏனெனில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை கிராமங்களும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவையாகும் இக்கிராமங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டாலும் இம்மக்களுக்குரிய அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களும் இவ் விசேட செயலணித்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
முல்லைத்தீவே இறுதி யுத்தத்தின் இறுதி நிமிடங்களை சுமந்த பகுதி. இதில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்.?
அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு, காணமல் போன உறவுகளின் போராட்டம், வறுமை இதற்கு நியாயமான நீதியான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்காது நல்லிணக்கம் என்பது ஏற்படுத்தப்படுவது சாத்தியமற்ற விடயம் ஒன்றாகவே காணப்படும்.
முல்லைத்தீவில் சிங்கள மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன தொழிலை மேற்கொள்ளுகின்றனர். அதற்கு அங்குள்ள கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து?
முல்லைத்தீவில் மீனவர்களுக்கு செய்யப்படும் அநியாயங்கள் பல. இவை தொடர்பாக அமைச்சு மட்டம் வரை முறைப்பாடுகள் செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டும் சம்மந்தப்பட்ட அமைச்சரை உரிய கடற்கரை பிரதேசங்களுக்கு கொண்டுசென்று நேரில் காட்டியும் இதுவரை இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
வீடுகளற்ற மக்களுக்கு பொருத்து வீட்டுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.அது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?
பொருத்து வீடு எமது பிரதேசத்திற்கு பொருத்தமற்றது. அதுவீடு அல்ல இரும்புக் கூடு.மக்களுக்கு அவசரமாக வீடு தேவை. மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொருத்தமற்ற பெரும் செலவிலான வீட்டை கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது. ஆதனை நாங்கள் எதிர்க்கிறோம்.மக்களுக்கு தேவையான அவர்களுக்கு உகந்த வீட்டையே கொடுக்க வேண்டும்.
பெண் தலமைத்துவ குடும்பங்களை முன்னேற்றுவதற்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவை?
பொதுவாக மீள்குடியேற்றக் காலத்தில் இருந்து ஒன்பது வருடங்களாக அரசு அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களை முன்னிலைப்படுத்தியே வாழ்வாதார செயற்பாடுகளை செய்து வருகின்றன. ஆனால் இன்றுவரை முல்லைத்தீவு மாவட்டமே வறுமையான மாவட்டமாக உள்ளது. இதற்கு பயனாளி தெரிவு சரியாக நடைபெறுவதில்லை. முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிலை உருவாக வேண்டும்.
முன்னாள் போராளிகளை சமூகமையப்படுத்த நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன?
தனியே முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து எந்த முன்னெடுப்புக்களையும் செய்யமுடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை தற்போதும் உள்ளது. இதனால் மாற்றுவலுவுள்ளவர்களை ஒன்றிணைத்து பிரதேச செயலகங்கள் ரீதியாக ஒளிரும்வாழ்வு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களின் கல்வி பொருளாதார மேம்பாடுகளுக்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் பெண் போராளிகளை அரசியலுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றீர்களா நீங்கள்? அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க என்ன முயற்சி எடுக்கின்றீர்கள்?
ஓர் இலட்சியத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் போராளிகள் ஆனால் இன்று அவர்கள் நடைபிணமாக ஆக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரியது அதிலும் குறிப்பாக பெண் போராளிகள் சமூக ரீதியாக பல அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளனர். இவர்கள் நிச்சயமாக முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன். பெண்களை வலுப்படுத்துவதற்காக ஏற்கனவே முயற்சியாண்மை உடைய பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன, இதனைவிட விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பெண்கள் அரசியலில் உட்புகுவதற்கும் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவு இலங்கையில். ஒரு பெண்னாக அரசியலில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
இணையத்தளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான செய்திகள். அரசியலினுள் வந்த ஆரம்ப காலங்களில் இத்தகைய பொய்யான செய்திகள் எனக்கு சவலாக இருந்தாலும் தற்போது இவற்றை எனக்கான ஓர் விளம்பரமாகவே கருதுகின்றேன். உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களுக்கு சேவை செய்யும் பொழுது இவ்வாறான பொய்யான தகவல்கள் அடிபட்டு போவதை காணக்கூடியதாக உள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய அதிகமான நேரத்தை ஒதுக்கவேண்டியுள்ளது ஆனால் கணவரும் பிள்ளைகளும் முழு ஒத்துழைப்பை வழங்குவதால் ஒரு குடும்பப்பெண் எதிர்கொள்ளும் சுமைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள முடிகின்றது.
சிங்கள தமிழ் மொழியாற்றல் இல்லாமை நல்லிணக்கத்திற்கு சவாலாக அமைகின்றது. அடுத்த தலைமுறைகளுக்கு மொழி ஆற்றலை வளர்ப்பதற்கு ஏதாவது திட்டங்கள் உள்ளனவா?
விசேடமாக மொழியை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை ஆனால் பொதுவாக கல்வியை விருத்தி செய்வதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை புலம்பெயர் உறவுகள் ஊடாக பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
; தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினராக நல்லிணக்கத்திற்கு உங்கள் பணி என்ன?
பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டமை, துறைசார் குழுக்கள் அமைக்கப்பட்டமை, வழிநடத்தும் குழு என்பன அமைக்கப்பட்டு புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்னைக்கு தமிழ் மக்களின் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. ஆதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அவர்களின் குழுவினரேஅதனைக் குழப்புகின்ற குழப்பவாதிகளாக உள்ளனர்.
வடமாகாண ஆளுனர் இனங்களுக்கிடையில் கலப்புத் திருமணங்கள்; நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் என்கிறார்? அதனை நீங்கள் ஏற்கின்றீர்களா?
இல்லை, ஏற்றுக்கொள்ள முடியாதது.